6.77 திருவாய்மூர்
திருத்தாண்டகம்
765பாட அடியார், பரவக் கண்டேன்; பத்தர் கணம்
                       கண்டேன்; மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்; அங்கை
                  அனல் கண்டேன்; கங்கையாளைக்
கோடல், அரவு, ஆர் சடையில் கண்டேன்;
     கொக்கின் இதழ் கண்டேன்; கொன்றை கண்டேன்;
வாடல்-தலை ஒன்று கையில் கண்டேன்-வாய்மூர்
                     அடிகளை நான் கண்ட ஆறே!.