6.37 திருஐயாறு
திருத்தாண்டகம்
370“ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி!
                    ஆரமுதே!” என்றேன், நானே;
“கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறள்
            பூதப்பல் படையாய்!” என்றேன், நானே;
“பேர் ஆயிரம் உடையாய்!” என்றேன், நானே;
       “பிறை சூடும் பிஞ்ஞகனே!” என்றேன், நானே;
“ஆரா அமுதே! என் ஐயாற(ன்)னே!” என்று என்றே
                     நான் அரற்றி நைகின்றேனே!.