436ஆண்டானை, வானோர் உலகம் எல்லாம்; அந் நாள்
                       அறியாத தக்கன் வேள்வி
மீண்டானை, விண்ணவர்களோடும் கூடி; விரை மலர்
                 மேல் நான்முகனும் மாலும் தேர
நீண்டானை; நெருப்பு உருவம் ஆனான் தன்னை;
        நிலை இலார் மும்மதிலும் வேவ, வில்லைப்
பூண்டானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய்
          இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.