634பொய் ஏதும் இல்லாத மெய்யன் தன்னை,
        புண்ணியனை, நண்ணாதார் புரம் நீறு ஆக
எய்தானை, செய் தவத்தின் மிக்கான் தன்னை, ஏறு
          அமரும் பெருமானை, இடம் மான் ஏந்து
கையானை, கங்காள வேடத்தானை, கட்டங்கக்
              கொடியானை, கனல் போல் மேனிச்
செய்யானை, திரு ஆனைக்கா உளானை,
           செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.