808மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய்;
         மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்;
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய்;
     பூந்துருத்திப் பொய் இலியாய் நின்றான் கண்டாய்;
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்;
                   ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய்
         கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.