| 504 | மை வானம் மிடற்றானை, அவ் வான் மின் போல் வளர் சடைமேல் மதியானை, மழை ஆய் எங்கும் பெய்வானை, பிச்சாடல் ஆடுவானை, பிலவாய பேய்க்கணங்கள் ஆர்க்கச் சூல் அம்பு ஒய்வானை, பொய் இலா மெய்யன் தன்னை, பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை செய்வானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே. |