| 415 | வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும், வானக் கயிலாயன் நீயே என்றும், கானம் நடம் ஆடி நீயே என்றும், கடவூரில் வீரட்டன் நீயே என்றும், ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும், ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும், தேன் ஆய் அமுது ஆனாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே. |