222விண்ணோர் பெருமானை, வீரட்ட(ன்)னை, வெண்
               நீறு மெய்க்கு அணிந்த மேனியானை,
பெண்ணானை, ஆணானை, பேடியானை,
           பெரும்பற்றாத்தண் புலியூர் பேணினானை,
அண்ணாமலையானை, ஆன் ஐந்துஆடும் அணி
              ஆரூர் வீற்றிருந்த அம்மான் தன்னை,
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண்
   நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.