731 | விரை கமழும் மலர்க் கொன்றைத் தாரான் கண்டாய்; வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்; அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய்; அழல் ஆடி கண்டாய்; அழகன் கண்டாய்; வரு திரை நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே. |