820விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும்;
       வெண்நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்;
மலையினார் மங்கை மணாளர் போலும்;
           மாற்பேறு காப்பு ஆய் மகிழ்ந்தார் போலும்;
தொலைவு இலார் புரம் மூன்றும் தொலைத்தார்
    போலும்; சோற்றுத்துறை, துருத்தி, உள்ளார் போலும்;
சிலையின் ஆர் செங்கண் அரவர் போலும்
    திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.