6.83 திருப்பாசூர்
திருத்தாண்டகம்
823விண் ஆகி, நிலன் ஆகி, விசும்பும் ஆகி,
              வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற
எண் ஆகி, எழுத்து ஆகி, இயல்பும் ஆகி, ஏழ்
              உலகும் தொழுது ஏத்திக் காண நின்ற
கண் ஆகி, மணி ஆகி, காட்சி ஆகி, காதலித்து
                   அங்கு அடியார்கள் பரவ நின்ற
பண் ஆகி, இன் அமுது ஆம் பாசூர் மேய
      பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.