Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
7.18 திருவேள்விக்குடி
நட்டராகம்
1மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை;
சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால்,
காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல்
ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
உரை
   
2கட்டக் காட்டின்(ன்) நடம் ஆடுவர்; யாவர்க்கும் காட்சி ஒண்ணார்;
சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர்; பாடுவர்; தூய நெய்யால்
வட்டக்குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார்
அட்டக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
உரை
   
7.71 திருமறைக்காடு
காந்தாரம்
1யாழைப் பழித் தன்ன மொழி மங்கை ஒருபங்கன்,
பேழைச் சடை முடி மேல் பிறை வைத்தான், இடம் பேணில்
தாழைப் பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.
உரை
   
3அங்கங்களும் மறை நான்கு உடன் விரித்தான் இடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை,
சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி,
வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே.
உரை
   
5சங்கைப் பட நினையாது எழு, நெஞ்சே, தொழுது ஏத்த!
கங்கைச் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
அங்கக் கடல் அரு மா மணி உந்திக் கரைக்கு ஏற்ற,
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
உரை
   
7முளை வளர் இளமதி உடையவன், முன் செய்த வல்வினைகள்-
களை களைந்து எனை ஆளல்(ல்) உறு கண்டன், இடம் செந்நெல்
வளை விளைவயல் கயல் பாய்தரு குண, வார் மணல், கடல் வாய்
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
உரை
   
8நலம் பெரியன, சுரும்பு ஆர்ந்தன, நம்கோன் இடம் அறிந்தோம்;
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கைச்-
சலம் புரி சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
வலம் புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
உரை
   
9குண்டாடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும்
கண்டார் கண்ட காரணம்(ம்) அவை கருதாது கைதொழுமின்-
எண் தோளினன், முக்கண்ணினன், ஏழ் இசையினன், அறுகால்
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணிநீர் மறைக்காடே!
உரை