Try error :java.sql.SQLException: Closed Statement
 
7.73 திருஆரூர்
காந்தாரம்
1கரையும், கடலும், மலையும், காலையும், மாலையும், எல்லாம்
உரையில் விரவி வருவான்; ஒருவன்; உருத்திரலோகன்;
வரையின் மடமகள் கேள்வன்; வானவர் தானவர்க்கு எல்லாம்
அரையன்; இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
உரை
   
3சொல்லில் குலா அன்றிச் சொல்லேன்; தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்;
கல்லில் வலிய மனத்தேன்; கற்ற பெரும் புலவாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான், அருமறை ஆறு அங்கம் ஓதும்
எல்லை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
உரை
   
7.25 திருமுதுகுன்றம்
நட்டராகம்
1பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்;
முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்;
மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே,
என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே? .
உரை
   
3“காணியேல் பெரிது உடையனே! கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை,
பேணியே விருந்து ஓம்புமே!” என்று பேசினும் கொடுப்பார் இலை;
பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண் புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
உரை
   
9கற்றிலாதானை, “கற்று நல்லனே!”, “காமதேவனை ஒக்குமே”,
முற்றிலாதானை, “முற்றனே!”, என்று மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
உரை