தொடக்கம்
7.21 திருக்கச்சிமேற்றளி
நட்டராகம்
1
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்ற
சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும்
எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next