தொடக்கம் |
|
|
2 | எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால், அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி, இங்கே என் வினையை அறுத்திட்டு, எனை ஆளும் கங்கா நாயகனே! கழிப்பாலை மேயானே! . |
|
உரை
|
|
|
|
|
3 | ஒறுத்தாய், நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய், எத்தனையும் நாயேனைப் பொருள் படுத்துச் செறுத்தாய்; வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம் கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே! . |
|
உரை
|
|
|
|
|
5 | ஒழிப்பாய், என் வினையை; உகப்பாய்; முனிந்து அருளித் தெழிப்பாய்; மோதுவிப்பாய்; விலை ஆவணம் உடையாய் கழிப்பால் கண்டல் தங்கச் சுழி ஏந்து மா மறுகின் கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே! . |
|
உரை
|
|
|
|
|
7 | பருத் தாள் வன் பகட்டைப் படம் ஆக முன் பற்றி, அதள்- உரித்தாய், ஆனையின் தோல்; உலகம் தொழும் உத்தமனே! எரித்தாய், முப்புரமும்; இமையோர்கள் இடர் கடியும் கருத்தா! தண்கழனிக் கழிப்பாலை மேயானே! . |
|
உரை
|
|
|
|
|
9 | பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான், செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான், மை ஆர் கண்ணியொடு மகிழ்வான், கழிப்பாலை அதே . |
|
உரை
|
|
|
|
|
10 | பழி சேர் இல் புகழான், பரமன், பரமேட்டி, கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை, தொழுவான் நாவலர்கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ் வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே . |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next