|
7.35 திருப்புறம்பயம் கொல்லி |
1 | அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி நின்றும் போந்து வந்து இன்னம்பர்த் தங்கினோமையும், “இன்னது” என்றிலர், ஈசனார்; எழு, நெஞ்சமே! கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி, வானவர்தாம் தொழும் பொங்கு மால்விடை ஏறி செல்வப் புறம்பயம் தொழப் போதுமே. |
|
உரை
|