தொடக்கம் |
|
|
7.45 திருஆமாத்தூர் கொல்லிக்கௌவாணம் |
1 | காண்டனன் காண்டனன், காரிகையாள் தன் கருத்தனாய் ஆண்டனன் ஆண்டனன்; ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆட்- பூண்டனன் பூண்டனன்; பொய் அன்று; சொல்லுவன்; கேண்மின்கள்: மீண்டனன் மீண்டனன், வேதவித்து அல்லாதவர்கட்கே. |
|
உரை
|
|
|
|
|
2 | பாடுவன் பாடுவன், பார்ப் பதிதன் அடி பற்றி, நான் தேடுவன் தேடுவன்; திண்ணெனப் பற்றிச் செறிதர ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளை, கூடுவன் கூடுவன், குற்றம் அது அற்று என் குறிப்பொடே. |
|
உரை
|
|
|
|
|
3 | காய்ந்தவன் காய்ந்தவன், கண் அழலால் அன்று காமனை; பாய்ந்தவன் பாய்ந்தவன், பாதத்தினால் அன்று கூற்றத்தை; ஆய்ந்தவன் ஆய்ந்தவன், ஆமாத்தூர் எம் அடிகளார், ஏய்ந்தவன் ஏய்ந்தவன், எம்பிராட்டியைப் பாகமே. |
|
உரை
|
|
|
|
|
4 | ஓர்ந்தனன் ஓர்ந்தனன், உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள், சேர்ந்தனன் சேர்ந்தனன், சென்று திரு ஒற்றியூர் புக்கு; சார்ந்தனன் சார்ந்தனன், சங்கிலி மென்தோள் தடமுலை; ஆர்ந்தனன் ஆர்ந்தனன், ஆமாத்தூர் ஐயன் அருள் அதே. |
|
உரை
|
|
|
|
|
5 | வென்றவன் வென்றவன், வேள்வியில் விண்ணவர் தங்களை; சென்றவன் சென்றவன், சில்பலிக்கு என்று தெரு இடை; நின்றவன் நின்றவன், நீதி நிறைந்தவர் தங்கள் பால்; அன்று அவன் அன்று அவன், செய் அருள்; ஆமாத்தூர் ஐயனே. |
|
உரை
|
|
|
|
|
6 | காண்டவன் காண்டவன், காண்டற்கு அரிய கடவுளாய்; நீண்டவன் நீண்டவன், நாரணன் நான்முகன் நேடவே; ஆண்டவன் ஆண்டவன், ஆமாத்தூரையும் எனையும் ஆள்; பூண்டவன் பூண்டவன், மார்பில் புரிநூல் புரளவே. |
|
உரை
|
|
|
|
|
7 | எண்ணவன் எண்ணவன், ஏழ் உலகத்து உயிர் தங்கட்கு; கண் அவன் கண் அவன், “காண்டும்” என்பார் அவர் தங்கட்கு; பெண் அவன் பெண் அவன், மேனி ஓர்பாகம்; ஆம், பிஞ்ஞகன்; அண்ணவன் அண்ணவன்-ஆமாத்தூர் எம் அடிகளே. |
|
உரை
|
|
|
|
|
8 | பொன்னவன் பொன்னவன்; பொன்னைத் தந்து என்னைப் போக விடா மின்னவன் மின்னவன்; வேதத்தின் உள் பொருள் ஆகிய அன்னவன் அன்னவன்; ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால் “என்னவன் என்னவன்!” என் மனத்து இன்புற்று இருப்பனே. |
|
உரை
|
|
|
|
|
9 | தேடுவன் தேடுவன், செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்; நாடுவன் நாடுவன், நாபிக்கு மேலே ஓர் நால்விரல்; மா(ட்)டுவன் மா(ட்)டுவன், வன் கை பிடித்து; மகிழ்ந்து உளே ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளே. |
|
உரை
|
|
|
|
|
10 | உற்றனன், உற்றவர் தம்மை ஒழிந்து, உள்ளத்து உள்பொருள் பற்றினன், பற்றினன், பங்கயச் சேவடிக்கே செல்ல; அற்றனன் அற்றனன்; ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆட்- பெற்றனன் பெற்றனன், பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே. |
|
உரை
|
|
|
|
|
7.78 திருக்கேதாரம் நட்டபாடை |
1 | வாழ்வு ஆவது மாயம்(ம்); இது மண் ஆவது திண்ணம்; பாழ் போவது பிறவிக் கடல்; பசி, நோய், செய்த பறி தான்; தாழாது அறம் செய்ம்மின்! தடங்கண்ணான் மலரோனும் கீழ் மேல் உற நின்றான் திருக்கேதாரம் எனீரே! |
|
உரை
|
|
|
|
|
3 | கொம்பைப் பிடித்து ஒருக்(கு)காலர்கள் இருக்கால் மலர் தூவி, “நம்பன் நமை ஆள்வான்” என்று, நடுநாளையும் பகலும்; கம்பக் களிற்று இனம் ஆய் நின்று, சுனை நீர்களைத் தூவி, செம்பொன் பொடி சிந்தும் திருக்கேதாரம் எனீரே! |
|
உரை
|
|
|
|
|
5 | வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில்(ல்) அழுந்தாதே, நாள் ஓடிய நமனார் தமர் நணுகாமுனம் நணுகி, ஆள் ஆய் உய்ம்மின்! அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே; கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே! |
|
உரை
|
|
|
|
|
7 | பண்ணின் தமிழ் இசை பாடலின், பழ வேய் முழவு அதிர, கண்ணின்(ன்) ஒளி கனகச்சுனை வயிரம்(ம்) அவை சொரிய, மண் நின்றன மதவேழங்கள் மணி வாரிக் கொண்டு எறிய, கிண்ணென்று இசை முரலும் திருக்கேதாரம் எனீரே! |
|
உரை
|
|
|
|
|
9 | பொதியே சுமந்து உழல்வீர்; பொதி அவம் ஆவதும் அறியீர்; மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும், வினையால்; கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க(வ்) வரை அடர்த்துக் கெதி பேறு செய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே! |
|
உரை
|
|
|
|
|
10 | நாவின் மிசை அரைய(ன்)னொடு, தமிழ் ஞானசம்பந்தன், யாவர் சிவன் அடியார்களுக்கு, அடியான் அடித்தொண்டன், தேவன் திருக்கேதாரத்தை ஊரன்(ன்) உரை செய்த பாவின் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே. |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next