தொடக்கம் |
|
|
7.47 ஊர்த்தொகை பழம்பஞ்சுரம் |
1 | காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்! கோட்டூர்க் கொழுந்தே! அழுந்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே! பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே! மாட்(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே! |
|
உரை
|
|
|
|
|
2 | கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய்! குழகா! குற்றாலா! மங்குல்-திரிவாய்! வானோர் தலைவா! வாய்மூர் மணவாளா! சங்கக் குழை ஆர் செவியா! அழகா! அவியா அனல் ஏந்திக் கங்குல் புறங்காட்டு ஆடீ! அடியார் கவலை களையாயே! |
|
உரை
|
|
|
|
|
3 | நிறைக் காட்டானே! நெஞ்சத்தானே! நின்றியூரானே! மிறை(க்)க் காட்டானே! புனல் சேர் சடையாய்! அனல் சேர் கையானே! மறைக்காட்டானே! திரு மாந்துறையாய்! மாகோணத்தானே! இறைக்(க்) காட்டாயே, எங்கட்கு உன்னை! எம்மான் தம்மானே! |
|
உரை
|
|
|
|
|
4 | ஆரூர் அத்தா! ஐயாற்று அமுதே! அளப்பூர் அம்மானே! கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே! பேரூர் உறைவாய்! பட்டிப் பெருமான்! பிறவா நெறியானே! பார் ஊர் பலரும் பரவப்படுவாய்! பாரூர் அம்மானே! |
|
உரை
|
|
|
|
|
5 | மருகல் உறைவாய்! மாகாளத்தாய்! மதியம் சடையானே! அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே! கருகல் குரலாய்! வெண்ணிக் கரும்பே! கானூர்க் கட்டியே! பருகப் பணியாய், அடியார்க்கு உன்னை! பவளப்படியானே! |
|
உரை
|
|
|
|
|
6 | தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே வேங்கூர் உறைவாய்! விளமர் நகராய்! விடை ஆர் கொடியானே! நாங்கூர் உறைவாய்! தேங்கூர் நகராய்! நல்லூர் நம்பானே! பாங்கு ஊர் பலி தேர் பரனே! பரமா! பழனப்பதியானே! |
|
உரை
|
|
|
|
|
7 | தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந் தாராய்! வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே! ஆனைக்காவில் அரனே! பரனே! அண்ணாமலையானே! ஊனைக் காவல் கைவிட்டு, உன்னை உகப்பார் உணர்வாரே. |
|
உரை
|
|
|
|
|
8 | துருத்திச் சுடரே! நெய்த்தானத்தாய்! சொல்லாய், கல்லாலா! பருத்(த்)தி நியமத்து உறைவாய்! வெயில் ஆய், பல ஆய், காற்று ஆனாய்; திருத்தித் திருத்தி வந்து, என் சிந்தை இடம் கொள் கயிலாயா! அருத்தித்து, உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே! |
|
உரை
|
|
|
|
|
9 | புலியூர்ச் சிற்றம்பலத்தாய்! புகலூர்ப் போதா! மூதூரா! பொலி சேர் புரம் மூன்று எரியச் செற்ற புரி புன்சடையானே! வலி சேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடீ! கலி சேர் புறவில் கடவூர் ஆளீ! காண அருளாயே! |
|
உரை
|
|
|
|
|
10 | கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி, மைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச் சிங்கடி- தம்மான்-ஊரன், சடையன் சிறுவன், அடியன்-தமிழ் மாலை செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே. |
|
உரை
|
|
|
|