தொடக்கம் |
|
|
2 | கூடிய இலயம் சதி பிழையாமை, கொடி இடை உமை அவள் காண, ஆடிய அழகா! அருமறைப் பொருளே! “அங்கணா! எங்கு உற்றாய்?” என்று தேடிய வானோர் சேர் திரு முல்லை-வாயிலாய்! திருப் புகழ் விருப்பால் பாடிய அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே!. |
|
உரை
|
|
|
|
|
3 | விண் பணிந்து ஏத்தும் வேதியா! மாதர் வெருவிட, வேழம் அன்று உரித்தாய்! செண்பகச் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! தேவர் தம் அரசே! தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய்! சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப! நின் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
|
உரை
|
|
|
|
|
5 | சந்தனவேரும், கார் அகில் குறடும், தண் மயில் பீலியும், கரியின் தந்தமும், தரளக் குவைகளும், பவளக்-கொடிகளும், சுமந்து கொண்டு உந்தி வந்து இழி பாலி வடகரை முல்லை-வாயிலாய்! மாசு இலா மணியே! பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
|
உரை
|
|
|
|
|
6 | மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக் குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்; செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன் பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
|
உரை
|
|
|
|
|
8 | நம்பனே! அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட சம்புவே! உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா! செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில்-தேடி, யான் திரிதர்வேன், கண்ட பைம்பொனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
|
உரை
|
|
|
|
|
9 | மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி தன்மேல் மதியாதே கட்டுவான் வந்த காலனை, மாளக் காலினால் ஆர் உயிர் செகுத்த சிட்டனே! செல்வத் திரு முல்லை வாயில் செல்வனே! செழுமறை பகர்ந்த பட்டனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
|
உரை
|
|
|
|
|
11 | விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை, திரை தரு புனல் சூழ் திரு முல்லை வாயில் செல்வனை, நாவல் ஆரூரன் உரை தரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள், நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர், விண்ணவர்க்கு அரசே . |
|
உரை
|
|
|
|