Try error :java.sql.SQLException: Closed Resultset: getString
 
2சிகரத்து இடை இள வெண்பிறை வைத்தான் இடம், தெரியில்
முகரத்து இடை முத்தின்(ன்) ஒளி பவளத்திரள், ஓதம்,
தகரத்து இடை தாழைத்திரள் ஞாழல்-திரள் நீழல்,
மகரத்தொடு சுறவம், கொணர்ந்து எற்றும் மறைக்காடே.
உரை
   
4நரை விரவிய மயிர் தன்னொடு பஞ்ச(வ்) வடி மார்பன்,
உரை விரவிய உத்தமன், இடம் உணரல்(ல்) உறு, மனமே!
குரை விரவிய குலை சேகரக் கொண்டல்-தலை விண்ட
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே.
உரை
   
6அடல் விடையினன், மழுவாளினன், அலரால் அணி கொன்றைப்
படரும் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவைக்-
கடல் இடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை
மடல் இடை இடை வெண்குருகு எழு மணிநீர் மறைக்காடே.
உரை