தொடக்கம் |
|
|
7.77 திருஐயாறு காந்தாரபஞ்சமம் |
1 | பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்; இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன், நான்- கரவு இல் அருவி கமுகு உண்ண, தெங்கு அம் குலைக்கீழ்க் கருப்பாலை அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ! |
|
உரை
|
|
|
|
|
2 | எங்கே போவேன் ஆயிடினும், அங்கே வந்து என் மனத்தீராய், சங்கை ஒன்றும் இன்றியே தலை நாள் கடை நாள் ஒக்கவே; கங்கை சடை மேல் கரந்தானே! கலை மான் மறியும் கனல் மழுவும் தங்கும், திரைக் காவிரிக் கோட்டத்து, ஐயாறு உடைய அடிகளோ! |
|
உரை
|
|
|
|
|
3 | மருவிப் பிரிய மாட்டேன், நான்; வழி நின்றொழிந்தேன்; ஒழிகிலேன்- பருவி விச்சி(ய) மலைச்சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி, குருவி ஓப்பி, கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டந் தர, அம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ! |
|
உரை
|
|
|
|
|
4 | பழகா நின்று பணி செய்வார், பெற்ற பயன் ஒன்று அறிகிலேன், இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு; ஏகபடம் ஒன்று அரைச் சாத்தி! குழகா! வாழை, குலை, தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே, அழகு ஆர் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ! |
|
உரை
|
|
|
|
|
5 | பிழைத்த பிழை ஒன்று அறியேன், நான்; பிழையைத் தீரப் பணியாயே! மழைக் கண் நல்லார் குடைந்து ஆட, மலையும் நிலனும் கொள்ளாமை கழைக் கொள் பிரசம் கலந்து, எங்கும் கழனி மண்டி, கை ஏறி, அழைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ! |
|
உரை
|
|
|
|
|
6 | கார்க் கொள் கொன்றை சடைமேல் ஒன்று உடையாய்! விடையாய்! நகையினால் மூர்க்கர் புரம் மூன்று எரி செய்தாய்! முன் நீ; பின் நீ; முதல்வன் நீ வார்க் கொள் அருவி பல வாரி, மணியும் முத்தும் பொன்னும் கொண்டு, ஆர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ! |
|
உரை
|
|
|
|
|
7 | மலைக்கண் மடவாள் ஒரு பால் ஆய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்! சிலைக் கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய்! தீர்த்தன் நீ மலைக் கொள் அருவி பல வாரி, மணியும் முத்தும் பொன்னும் கொண்டு, அலைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ! |
|
உரை
|
|
|
|
|
8 | போழும் மதியும், புனக் கொன்றை, புனல், சேர் சென்னிப் புண்ணியா! சூழும் அரவச் சுடர்ச் சோதீ! உன்னைத் தொழுவார் துயர் போக, வாழுமவர்கள், அங்கு அங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட! ஆழும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ! |
|
உரை
|
|
|
|
|
9 | கதிர்க்(க்) கொள் பசியே ஒத்தே நான் கண்டேன், உம்மைக் காணாதேன்; எதிர்த்து நீந்த மாட்டேன், நான்-எம்மான் தம்மான் தம்மானே! விதிர்த்து மேகம் மழை பொழிய, வெள்ளம் பரந்து, நுரை சிதறி, அதிர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ! |
|
உரை
|
|
|
|
|
10 | கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர்; குறிப்பு இல்லீர்; தேச வேந்தன் திருமாலும், மலர் மேல் அயனும், காண்கிலார் தேசம் எங்கும் தெளித்து ஆடத் தெண்நீர் அருவி கொணர்ந்து எங்கும் வாசம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ! |
|
உரை
|
|
|
|
|
11 | கூடி அடியார் இருந்தாலும், குணம் ஒன்று இல்லீர்; குறிப்பு இல்லீர்; ஊடி இருந்தும் உணர்கிலேன், உம்மை, தொண்டன், ஊரனேன், தேடி எங்கும் காண்கிலேன்; திரு ஆரூரே சிந்திப்பன்- ஆடும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ! |
|
உரை
|
|
|
|