தொடக்கம் |
|
|
2 | மலைச் சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள் மலைப் பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி, தன களிற்றை அழைத்து ஓடியும், பிளிறீயவை அலமந்து வந்து எய்த்து, திகைத்து ஓடி, தன் பிடி தேடிடும் சீ பர்ப்பத மலையே. |
|
உரை
|
|
|
|
|
4 | மை ஆர் தடங்கண்ணாள் மட மொழியாள் புனம் காக்கச் செவ்வே திரிந்து, “ஆயோ!” எனப் போகாவிட, விளிந்து, கை பாவிய கவணால் மணி எறிய(வ்) இரிந்து ஓடிச் செவ்வாயன கிளி பாடிடும் சீ பர்ப்பத மலையே. |
|
உரை
|
|
|
|
|
6 | “மாற்றுக் களிறு அடைந்தாய்” என்று மதவேழம் கை எடுத்து, மூற்றித் தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய, “தூற்றத் தரிக்கில்லேன்” என்று சொல்லி(ய்) அயல் அறியத் தேற்றிச் சென்று, பிடி சூள் அறும் சீ பர்ப்பத மலையே. |
|
உரை
|
|
|
|
|
8 | திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன் தன கழலை அரிய திருமாலோடு அயன் தானும்(ம்) அவர் அறியார்; கரியின்(ன்) இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்துத் திரி தந்தவை, திகழ்வால் பொலி சீ பர்ப்பத மலையே. |
|
உரை
|
|
|
|
|
10 | நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன் செல்லல்(ல்) உற அரிய சிவன் சீ பர்ப்பத மலையை அல்லல் அவை தீரச் சொன தமிழ் மாலைகள் வல்லார் ஒல்லைச் செல, உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே. |
|
உரை
|
|
|
|