தொடக்கம் |
|
|
7.86 திருவன்பார்த்தான்பனங்காட்டூர் சீகாமரம் |
1 | விடையின் மேல் வருவானை; வேதத்தின் பொருளானை; அடையில் அன்பு உடையானை; யாவர்க்கும் அறிய ஒண்ணா, மடையில் வாளைகள் பாயும் வன் பார்த்தான் பனங்காட்டூர், சடையில் கங்கை தரித்தானை; சாராதார் சார்பு என்னே! |
|
உரை
|
|
|
|
|
2 | அறையும் பைங்கழல் ஆர்ப்ப, அரவு ஆட, அனல் ஏந்தி, பிறையும் கங்கையும் சூடி, பெயர்ந்து, ஆடும் பெருமானார்; பறையும் சங்கு ஒலி ஓவாப் படிறன்; தன் பனங்காட்டூர் உறையும் எங்கள் பிரானை; உணராதார் உணர்வு என்னே! |
|
உரை
|
|
|
|
|
3 | தண் ஆர் மா மதி சூடி, தழல் போலும் திருமேனிக்கு எண் ஆர் நாள்மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் பண் ஆர் பாடல் அறாத படிறன்; தன் பனங்காட்டூர் பெண் ஆண் ஆய பிரானை; பேசாதார் பேச்சு என்னே! |
|
உரை
|
|
|
|
|
4 | நெற்றிக்கண் உடையானை, நீறு ஏறும் திருமேனிக் குற்றம் இல் குணத்தானை, கோணாதார் மனத்தானை பற்றிப் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர்ப் பெற்றொன்று ஏறும் பிரானை, பேசாதார் பேச்சு என்னே! |
|
உரை
|
|
|
|
|
5 | உரம் என்னும் பொருளானை, உருகில் உள் உறைவானை, சிரம் என்னும் கலனானை, செங்கண் மால்விடையானை, வரம் முன்னம் அருள் செய்வான், வன் பார்த்தான் பனங்காட்டூர்ப் பரமன், எங்கள் பிரானை, பரவாதார் பரவு என்னே! |
|
உரை
|
|
|
|
|
6 | எயிலார் பொக்கம்(ம்) எரித்த எண்தோள் முக்கண்(ண்) இறைவன்; வெயில் ஆய், காற்று என் வீசி, மின் ஆய், தீ என நின்றான்; மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன் பார்த்தான் பனங்காட்டூர்ப் பயில்வானுக்கு, அடிமைக் கண் பயிலாதார் பயில்வு என்னே! |
|
உரை
|
|
|
|
|
7 | மெய்யன், வெண்பொடி பூசும் விகிர்தன், வேத(ம்) முதல்வன், கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம்(ம்) அறுத்தான், பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர் ஐயன், எங்கள் பிரானை, அறியாதார் அறிவு என்னே! |
|
உரை
|
|
|
|
|
8 | வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பு இலியை, பஞ்சிச் சீறடியாளைப் பாகம் வைத்து உகந்தானை, மஞ்சு உற்ற மணி மாட வன் பார்த்தான் பனங்காட்டூர் நெஞ்சத்து எங்கள் பிரானை, நினையாதார் நினைவு என்னே! |
|
உரை
|
|
|
|
|
9 | மழையானும், திகழ்கின்ற மலரோன், என்று இருவர் தாம் உழையா நின்றவர் உள்க உயர்வானத்து உயர்வானை, பழையானை; பனங்காட்டூர் பதி ஆகத் திகழ்கின்ற குழை(க்)காதற்கு அடிமைக் கண் குழையாதார் குழைவு என்னே! |
|
உரை
|
|
|
|
|
10 | பார் ஊரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானை, சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல், அடி நாய் சொல், ஊர் ஊரன் உரை செய்வார், உயர்வானத்து உயர்வாரே. |
|
உரை
|
|
|
|