தொடக்கம் |
|
|
7.93 திருநறையூர்ச் சித்தீச்சுரம் குறிஞ்சி |
1 | நீரும் மலரும் நிலவும் சடைமேல் ஊரும் அரவம் உடையான் இடம் ஆம்- வாரும் அருவி மணி, பொன், கொழித்துச் சேரும்-நறையூர்ச் சித்தீச்சுரமே. |
|
உரை
|
|
|
|
|
2 | அளைப் பைஅரவு ஏர் இடையாள் அஞ்ச, துளைக்கைக்கரித் தோல் உரித்தான் இடம் ஆம்- வளைக்கைம் மடவார் மடுவில்-தடநீர்த் திளைக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே. |
|
உரை
|
|
|
|
|
3 | இகழும் தகையோர் எயில் மூன்றும் எரித்த பகழியொடு வில் உடையான் பதிதான் முகிழ்மென் முலையார் முகமே கமலம்- திகழும்-நறையூர்ச் சித்தீச்சுரமே. |
|
உரை
|
|
|
|
|
4 | மறக் கொள் அரக்கன் வரைதோள் வரையால் இறக் கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம்- நறக் கொள் கமலம் நளி பள்ளி எழத் திறக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே. |
|
உரை
|
|
|
|
|
5 | முழுநீறு அணி மேனியன், மொய்குழலார் எழு நீர்மை கொள்வான், அமரும் இடம் ஆம்- கழுநீர் கமழக் கயல், சேல், உகளும் செழுநீர்-நறையூர்ச் சித்தீச்சுரமே. |
|
உரை
|
|
|
|
|
6 | ஊன் ஆர் உடை வெண்தலை உண் பலி கொண்டு, ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம்- வான் ஆர் மதியம் பதி வண்பொழில்வாய்த் தேன் ஆர்-நறையூர்ச் சித்தீச்சுரமே. |
|
உரை
|
|
|
|
|
7 | கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய் நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம்- வார் ஊர் முலையார் மருவும் மறுகில் தேர் ஊர்-நறையூர்ச் சித்தீச்சுரமே. |
|
உரை
|
|
|
|
|
8 | கரியின் உரியும், கலைமான்மறியும், எரியும் மழுவும், உடையான் இடம் ஆம்- புரியும் மறையோர் நிறை சொல்பொருள்கள் தெரியும்-நறையூர்ச் சித்தீச்சுரமே. |
|
உரை
|
|
|
|
|
9 | பேணா முனிவன் பெரு வேள்வி எலாம் மாணாமை செய்தான் மருவும், இடம் ஆம்- பாண் ஆர் குழலும், முழவும், விழவில், சேண் ஆர்-நறையூர்ச் சித்தீச்சுரமே. |
|
உரை
|
|
|
|
|
10 | குறியில் வழுவாக் கொடுங்கூற்று உதைத்த எறியும் மழுவாள் படையான் இடம் ஆம்- நெறியில் வழுவா நியமத்தவர்கள் செறியும்-நறையூர்ச் சித்தீச்சுரமே. |
|
உரை
|
|
|
|
|
11 | போர் ஆர் புரம் எய் புனிதன் அமரும் சீர் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தை ஆரூரன் சொல் இவை வல்லவர்கள், ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே. |
|
உரை
|
|
|
|