தொடக்கம் |
|
|
7.94 திருச் சோற்றுத்துறை கௌசிகம் |
1 | அழல் நீர் ஒழுகியனைய சடையும், உழை ஈர் உரியும், உடையான் இடம் ஆம்- கழை நீர் முத்தும் ககைக்குவையும் சுழல் நீர்ப் பொன்னி-சோற்றுத்துறையே. |
|
உரை
|
|
|
|
|
2 | பண்டை வினைகள் பறிய நின்ற அண்ட முதல்வன், அமலன், இடம் ஆம்- இண்டை கொண்டு அன்பு இடை அறாத தொண்டர் பரவும்-சோற்றுத்துறையே. |
|
உரை
|
|
|
|
|
3 | கோல அரவும், கொக்கின் இறகும், மாலை மதியும், வைத்தான் இடம் ஆம்- ஆலும் மயிலும், ஆடல் அளியும், சோலை தரு நீர்-சோற்றுத்துறையே. |
|
உரை
|
|
|
|
|
4 | பளிக்குத்தாரை பவளவெற்பில் குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம்- அளிக்கும் ஆர்த்தி, அல்லால் மதுவும் துளிக்கும் சோலை-சோற்றுத்துறையே. |
|
உரை
|
|
|
|
|
5 | உதையும், கூற்றுக்கு; ஒல்கா விதிக்கு வதையும்; செய்த மைந்தன் இடம் ஆம்- திதையும் தாதும் தேனும் ஞிமிறும் துதையும் பொன்னி-சோற்றுத்துறையே. |
|
உரை
|
|
|
|
|
6 | ஓதக்கடல் நஞ்சினை உண்டிட்ட பேதைப்பெருமான் பேணும் பதி ஆம்- சீதப்புனல் உண்டு எரியைக் காலும் சூதப்பொழில் சூழ்-சோற்றுத்துறையே. |
|
உரை
|
|
|
|
|
7 | இறந்தார் என்பும், எருக்கும், சூடிப் புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில்- சிறந்தார், சுற்றம், திரு, என்று இன்ன துறந்தார் சேரும்-சோற்றுத்துறையே. |
|
உரை
|
|
|
|
|
8 | காமன் பொடியாக் கண் ஒன்று இமைத்த ஓமக் கடலார் உகந்த இடம் ஆம்- தேமென்குழலார் சேக்கை புகைத்த தூமம் விசும்பு ஆர்-சோற்றுத்துறையே. |
|
உரை
|
|
|
|
|
1 | குருகு பாய, கொழுங் கரும்புகள் நெரிந்த சாறு அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரைப் பருகும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், நினைந்து உருகும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
2 | பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்! அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை மறக்ககில்லாமையும், வளைகள் நில்லாமையும், உறக்கம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
4 | சக்கிரவாளத்து இளம் பேடைகாள்! சேவல்காள்! அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு, வக்கிரம் இல்லாமையும், வளைகள் நில்லாமையும், உக்கிரம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
7.52 திருஆலங்காடு பழம்பஞ்சுரம் |
1 | முத்தா! முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை பங்கா! சித்தா! சித்தித் திறம் காட்டும் சிவனே! தேவர் சிங்கமே! பத்தா! பத்தர் பலர் போற்றும் பரமா! பழையனூர் மேய அத்தா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. |
|
உரை
|
|
|
|
|
5 | வேல் அங்கு ஆடு தடங்கண்ணார் வளையுள் பட்டு, உன் நெறி மறந்து, மால் அங்கு ஆடி, மறந்தொழிந்தேன்; மணியே! முத்தே! மரகதமே! பால் அங்கு ஆடீ! நெய் ஆடீ! படர் புன்சடையாய்! பழையனூர் ஆலங்காடா! உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே. |
|
உரை
|
|
|
|
|
9 | எம்மான்! எந்தை! மூத்த(அ)ப்பன்! ஏழ் ஏழ் படிகால் எமை ஆண்ட பெம்மான்! ஈமப் புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே! பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் அம்மா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Statement