Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
7.97 திருநனிபள்ளி
பஞ்சமம்
1ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு அரிய
சோதியன்; சொல்பொருள் ஆய்; சுருங்கா மறை நான்கினையும்
ஓதியன்; உமபர்தம் கோன்; உலகத்தினுள் எவ் உயிர்க்கும்
நாதியன்; நம்பெருமான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
உரை
   
3வான் உடையான்; பெரியான்; மனத்தாலும் நினைப்பு அரியான்;
ஆன் இடை ஐந்து அமர்ந்தான்; அணு ஆகி, ஓர் தீ உருக் கொண்டு
ஊன் உடை இவ் உடலம்(ம்) ஒடுங்கிப் புகுந்தான்; பரந்தான்;
நான் உடை மாடு; எம்பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
உரை
   
5பண்ணற்கு அரியது ஒரு படை ஆழிதனைப் படைத்துக்
கண்ணற்கு அருள்புரிந்தான்; கருதாதவர் வேள்வி அவி
உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து, உகந்து,
நண்ணற்கு அரிய பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
உரை
   
7அங்கம் ஓர் ஆறு அவையும்(ம்), அருமாமறை, வேள்விகளும்,
எங்கும் இருந்து அந்தணர் எரிமூன்று அவை, ஓம்பும் இடம்;
பங்கயமா முகத்தாள் உமை பங்கன் உறை கோயில்;
செங்கயல் பாயும் வயல்-திரு ஊர்-நனிபள்ளி அதே.
உரை
   
3சாலக் கோயில் உள நின் கோயில்; அவை என் தலை மேல் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன்; வினையும் துரந்தேன்-வானோர் அறியா நெறியானே!
கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர் பூங் கச்சூர் வடபாலை
ஆலக்கோயில், கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே! .
உரை
   
7பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வோனே!
மெய்யே! எங்கள் பெருமான்! உன்னை நினைவார் அவரை நினை கண்டாய்!
மை ஆர் தடங்கண் மங்கை பங்கா! கங்கு ஆர் மதியம் சடை வைத்த
ஐயா! செய்யாய்! வெளியாய்! கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! .
உரை
   
10அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன்-ஆரூரன் பேர் முடி வைத்த
மன்னு புலவன், வயல் நாவலர் கோன், செஞ்சொல் நாவன், வன்தொண்டன்
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலைமேல் பயில்வாரே .
உரை