பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
256

101

101. சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
        றம்பல வன்கயிலை
    மலையொன்று மாமுகத் தெம்மையர்
        எய்கணை மண்குளிக்குங்

    கலையொன்று வெங்கணை யோடு
        கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
    கொலையொன்று திண்ணிய வாறையர்
        கையிற் கொடுஞ்சிலையே.