102. மைத்தழை யாநின்ற மாமிடற் றம்பல வன்கழற்கே மெய்த்தழை யாநின்ற வன்பினர் போல விதிர்விதிர்த்துக் கைத்தழை யேந்திக் கடமா வினாய்க்கையில் வில்லின்றியே பித்தழை யாநிற்ப ராலென்ன பாவம் பெரியவரே.