103. அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே ஒக்கு மிவள தொளிருரு வஞ்சிமஞ் சார்சிலம்பா கொக்குஞ் சுனையுங் குளிர்தளி ருங்கொழும் போதுகளும் இக்குன்றி லென்றும் மலர்ந்தறி யாத வியல்பினவே.