11. கூம்பலங் கைத்தலத் தன்பரென் பூடுரு கக்குனிக்கும் பாம்பலங் காரப் பரன்றில்லை யம்பலம் பாடலரின் தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள் தீங்கனி வாய்கமழும் ஆம்பலம் போதுள வோஅளி காள்நும் அகன்பணையே.