110. தோலாக் கரிவென்ற தற்குந் துவள்விற்கு மில்லின்தொன்மைக் கேலாப் பரிசுள வேயன்றி யேலேம் இருஞ்சிலம்ப மாலார்க் கரிய மலர்க்கழ லம்பல வன்மலையிற் கோலாப் பிரசமன் னாட்கைய நீதந்த கொய்தழையே.