112. தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ணல் தன்னொருபால் அவளத்த னாம்மக னாந்தில்லை யானன் றுரித்ததன்ன கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையுந் துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே.