பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
270

112

112. தவளத்த நீறணி யுந்தடந்
        தோளண்ணல் தன்னொருபால்
   அவளத்த னாம்மக னாந்தில்லை
        யானன் றுரித்ததன்ன
   கவளத்த யானை கடிந்தார்
        கரத்தகண் ணார்தழையுந்
   துவளத் தகுவன வோசுரும்
        பார்குழல் தூமொழியே.