பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
274

115

115.  பாசத் தளையறுத் தாண்டுகொண்
        டோன்தில்லை யம்பலஞ்சூழ்
    தேசத் தனசெம்மல் நீதந்
        தனசென் றியான்கொடுத்தேன்
    பேசிற் பெருகுஞ் சுருங்கு
        மருங்குல் பெயர்ந்தரைத்துப்
    பூசிற் றிலளன்றிச் செய்யா
        தனவில்லை பூந்தழையே.