பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
277

117

117. புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன்
        னேபின்னைப் போய்ப்பொலியும்
    அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
        அருவி  திருவுருவிற்
    கயல்வளர் வாட்கண்ணி போதரு
        காதரந் தீர்த்தருளுந்
    தயல்வளர் மேனிய னம்பலத்
        தான்வரைத் தண்புனத்தே.