117. புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன் னேபின்னைப் போய்ப்பொலியும் அயல்வளர் குன்றில்நின் றேற்றும் அருவி திருவுருவிற் கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரந் தீர்த்தருளுந் தயல்வளர் மேனிய னம்பலத் தான்வரைத் தண்புனத்தே.