பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
278

118

118. தினைவளங் காத்துச் சிலம்பெதிர்
        கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
    சுனைவளம் பாய்ந்து துணைமலர்
        கொய்து தொழுதெழுவார்
    வினைவளம் நீறெழ நீறணி
        யம்பல வன்றன்வெற்பிற்
    புனைவளர் கொம்பரன் னாயன்ன
        காண்டும் புனமயிலே.