பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
280

119

119. நரல்வே யினநின தோட்குடைந்
        துக்கநன் முத்தஞ்சிந்திப்
    பரல்வே யறையுறைக் கும்பஞ்
        சடிப்பரன் தில்லையன்னாய்
    வரல்வேய் தருவனிங் கேநிலுங்
        கேசென்றுன் வார்குழற்கீர்ங்
    குரல்வே யளிமுரல் கொங்கார்
        தடமலர் கொண்டுவந்தே.