129. மாடஞ்செய் பொன்னக ரும்நிக ரில்லையிம் மாதர்க்கென்னப் பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை யுள்ளலரைக் கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக் கூடஞ்செய் சாரற் கொடிச்சியென் றோநின்று கூறுவதே.