பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
295

132

132. பனித்துண்டஞ் சூடும் படர்சடை
        அம்பல வன்னுலகந்
    தனித்துண்டவன்தொழுந் தாளோன்
        கயிலைப் பயில்சிலம்பா
    கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப்
        பாரிப்புக் கண்டழிவுற்
    றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்
        கென்றஞ்சு மெம்மனையே.