133. ஈவிளை யாட நறவிளை வோர்ந்தெமர் மால்பியற்றும் வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கியெம் மெல்லியலைப் போய்விளை யாடலென் றாளன்னை அம்பலத் தான்புரத்தில் தீவிளை யாடநின் றேவிளை யாடி திருமலைக்கே.