பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
298

134

134. சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்
        பலவற் றொழாதுதொல்சீர்
    கற்று மறியல ரிற்சிலம்
        பாவிடை நைவதுகண்
    டெற்றுந் திரையின் னமிர்தை
        யினித்தம ரிற்செறிப்பார்
    மற்றுஞ் சிலபல சீறூர்
        பகர்பெரு வார்த்தைகளே.