பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
143

14

14. தேவரிற் பெற்றநஞ் செல்வக்
        கடிவடி வார்திருவே
   யாவரிற் பெற்றினி யார்சிதைப்
        பாரிமை யாதமுக்கண்

மூவரிற் பெற்றவர் சிற்றம்
        பலமணி மொய்பொழில்வாய்ப்
   பூவரிற் பெற்ற குழலியென்
        வாடிப் புலம்புவதே