14. தேவரிற் பெற்றநஞ் செல்வக் கடிவடி வார்திருவே யாவரிற் பெற்றினி யார்சிதைப் பாரிமை யாதமுக்கண் மூவரிற் பெற்றவர் சிற்றம் பலமணி மொய்பொழில்வாய்ப் பூவரிற் பெற்ற குழலியென் வாடிப் புலம்புவதே