பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
307

141

141. கனைகடற் செய்தநஞ் சுண்டுகண்
        டார்க்கம் பலத்தமிழ்தாய்
   வினைகெடச் செய்தவன் விண்தோய்
        கயிலை மயிலனையாய்
   நனைகெடச் செய்தன மாயின்
        நமைக்கெடச் செய்திடுவான்
   தினைகெடச் செய்திடு மாறுமுண்
        டோஇத் திருக்கணியே.