142. வழுவா இயலெம் மலையர் விதைப்பமற் றியாம்வளர்த்த கொழுவார் தினையின் குழாங்களெல் லாமெங் குழாம்வணங்குஞ் செழுவார் கழற்றில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவதித் தொல்புனத்தே.