பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
310

143

143. பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம்
        புகலப் புகலெமக்காம்
    விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு
        மேல்வரு மூரெரித்த
    நெருப்பர்க்கு நீடம் பலவருக்
        கன்பர் குலநிலத்துக்
    கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற
        தின்றிக் கடிப்புனமே.