பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
312

145

145. கணியார் கருத்தின்று முற்றிற்
        றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
    மணியார் பொழில்காண் மறத்திர்கண்
        டீர்மன்னு மம்பலத்தோன்
    அணியார் கயிலை மயில்காள்
        அயில்வே லொருவர்வந்தால்
    துணியா தனதுணிந் தாரென்னு
        நீர்மைகள் சொல்லுமினே.