145. கணியார் கருத்தின்று முற்றிற் றியாஞ்சென்றுங் கார்ப்புனமே மணியார் பொழில்காண் மறத்திர்கண் டீர்மன்னு மம்பலத்தோன் அணியார் கயிலை மயில்காள் அயில்வே லொருவர்வந்தால் துணியா தனதுணிந் தாரென்னு நீர்மைகள் சொல்லுமினே.