பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
317

148

148. மருந்துநம் மல்லற் பிறவிப்
        பிணிக்கம் பலத்தமிர்தாய்
    இருந்தனர் குன்றினின் றேங்கும்
        அருவிசென் றேர்திகழப்

    பொருந்தின மேகம் புதைந்திருள்
        தூங்கும் புனையிறும்பின்
    விருந்தினன் யானுங்கள் சீறூ
        ரதனுக்கு வெள்வளையே.