பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
318

149

149. விசும்பினுக் கேணி நெறியன்ன
        சின்னெறி மேன்மழைதூங்
    கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
        தாலொக்கும் ஐயமெய்யே
    இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
        கரிதெழி லம்பலத்துப்
    பசும்பனிக் கோடு மிலைந்தான்
        மலயத்தெம் வாழ்பதியே.