157. செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால் கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழ லேத்தலர்போல் முழங்கா ரரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்யிருள்வாய் வழங்கா அதரின் வழங்கென்று மோவின்றெம் வள்ளலையே.