பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
328

157

157. செழுங்கார் முழவதிர் சிற்றம்
        பலத்துப் பெருந்திருமால்
    கொழுங்கான் மலரிடக் கூத்தயர்
        வோன்கழ லேத்தலர்போல்
    முழங்கா ரரிமுரண் வாரண
        வேட்டைசெய் மொய்யிருள்வாய்
    வழங்கா அதரின் வழங்கென்று
        மோவின்றெம் வள்ளலையே.