158. ஓங்கு மொருவிட முண்டம் பலத்தும்ப ருய்யவன்று தாங்குமொருவன் தடவரை வாய்த்தழங் கும்மருவி வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன் றழுங்கப் பிடித்தெடுத்து வாங்கு மவர்க்கறி யேன்சிறி யேன்சொல்லும் வாசகமே.