பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
331

159

159. ஏனற் பசுங்கதி ரென்றூழ்க்
        கழிய எழிலியுன்னிக்
    கானக் குறவர்கள் கம்பலை
        செய்யும்வம் பார்சிலம்பா
    யானிற்றை யாமத்து நின்னருள்
        மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
    தேனக்க கொன்றையன் தில்லை
        யுறார்செல்லுஞ் செல்லல்களே.